என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சேலம் டாக்டர் மரணம்
நீங்கள் தேடியது "சேலம் டாக்டர் மரணம்"
சேலம் அழகாபுரத்தில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த டாக்டர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் அழகாபுரம் காண்வென்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாவேந்தன் (வயது 55). இவரது மனைவி புனிதா. இருவரும் டாக்டர்கள்.
கருத்து வேறுபாடு காரணமாக புனிதா கடந்த 10 ஆண்டுகளாக கணவரை பிரிந்து சென்னையில் வசித்து வருகிறார். இவர்களது ஒரே மகளை ஈரோட்டில் திருமணம் செய்து கொடுத்தனர். இதனால் பாவேந்தன் மட்டும் அழகாபுரத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் 4 நாட்களாக வீடு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம்அடைந்த அந்த பகுதியினர் அழகாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அங்கு விரைந்து சென்று போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது கட்டில் அருகே கீழே விழுந்த நிலையில் டாக்டர் பாவேந்தன் இறந்துகிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது.
இதுகுறித்துஅழகாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த டாக்டர் பாவேந்தன் ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா என்ற இயக்கத்தில் தீவிர பக்தராக கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் அழகாபுரம் காண்வென்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாவேந்தன் (வயது 55). இவரது மனைவி புனிதா. இருவரும் டாக்டர்கள்.
கருத்து வேறுபாடு காரணமாக புனிதா கடந்த 10 ஆண்டுகளாக கணவரை பிரிந்து சென்னையில் வசித்து வருகிறார். இவர்களது ஒரே மகளை ஈரோட்டில் திருமணம் செய்து கொடுத்தனர். இதனால் பாவேந்தன் மட்டும் அழகாபுரத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் 4 நாட்களாக வீடு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம்அடைந்த அந்த பகுதியினர் அழகாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அங்கு விரைந்து சென்று போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது கட்டில் அருகே கீழே விழுந்த நிலையில் டாக்டர் பாவேந்தன் இறந்துகிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது.
இதுகுறித்துஅழகாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த டாக்டர் பாவேந்தன் ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா என்ற இயக்கத்தில் தீவிர பக்தராக கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X